கேமிங் வரலாற்றின் இரண்டாவது மிகப்பெரிய கையகப்படுத்தல் முடிவடைந்துள்ளது. எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (EA) நிறுவனம் இப்போது சவுதி அரேபியாவின் PIF, சில்வர் லேக் பார்ட்னர்ஸ் மற்றும் ஜாரெட் குஷ்னரின் அஃபினிட்டி பார்ட்னர்ஸிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் (EA) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 55 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக மாறுகிறது. சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி (PIF), சில்வர் லேக் பார்ட்னர்ஸ் மற்றும் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் தலைமையிலான அஃபினிட்டி பார்ட்னர்ஸ் ஆகியோரின் கூட்டமைப்பிற்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய உரிமையாளர்கள் EA-ன் உலகளாவிய விளையாட்டு மற்றும் கேமிங் பிரான்சைஸுகளை மேம்படுத்த ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கேம் மேம்பாடு மற்றும் வீரர்களின் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதில் இவர்கள் கவனம் செலுத்த உள்ளனர் என்று கூறியுள்ளனர்.