மியாான்மருக்குத் திருப்பி அனுப்புவதால் 5,000 ரோஹிங்கியா அகதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று மலேசியா தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் மியான்மரில் அவர்கள் துன்புறுத்தப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளன.

மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், அவர்களை மீண்டும் மியான்மருக்கே திருப்பி அனுப்ப மாட்டோம் என்று மலேசிய அரசு உறுதி அளித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்வைத்த இந்தத் திட்டத்தை அந்நாட்டு வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபாட்ஜில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தற்போது 2,15,000-க்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரோஹிங்கியா அகதிகளாக உள்ளனர். மியான்மரின் ராணுவ ஆட்சி அகதிகளைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகக் கூறினாலும், அகதிகள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாவார்களா என்பதைத் தெளிவுபடுத்திய பின்னரே மலேசியா இறுதி முடிவு எடுக்கும்.