இந்தோனேசிய கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலக்கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய கடற்கரையருகே சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய-மெடிட்டரேனியன் சீஸ்மாலஜிக்கல் சென்டரின் (EMSC) படி, நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியில் சுமார் 35 கிமீ ஆழத்தில் இருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:58 மணியளவில் இது பதிவானது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறைந்தது மூன்று அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளன. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) சில பகுதிகளுக்கு உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிலப்பரப்பிலோ அல்லது தீவுகளிலோ சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை முகமை தெளிவுபடுத்தியுள்ளது. உயிரிழப்பு அல்லது சொத்து சேத குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.