1945 ஹிரோஷிமா அணுவெடிப்புச் சிதறல்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் இதுவரை அறியப்படாத ஒரு புதிய உலோகக் கலவையைக் கண்டறிந்துள்ளனர். ஹிரோஷிமா வளைகுடாவின் மணலில் இருந்து எடுக்கப்பட்ட 'ஹிரோஷிமைட்ஸ்' எனப்படும் கண்ணாடி போன்ற மணிகளில் இது காணப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா அணு குண்டுவெடிப்பினால் உருவான ஒரு புதிய உலோகக் கலவை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. ஹிரோஷிமா வளைகுடாவின் கடற்கரை மணலில் இருந்து சேகரிக்கப்பட்ட 'ஹிரோஷிமைட்ஸ்' எனப்படும் சிறிய கண்ணாடி போன்ற மணிகளுக்குள் இந்தப்பொருள் காணப்படுகிறது. வெடிப்பின் போது ஏற்பட்ட அதீத வெப்பம் கட்டிடப் பொருட்கள் மற்றும் உலோகங்களை ஆவியாக்கி, அவை மீண்டும் பூமியில் விழும்போது இந்த மணிகள் உருவாகின்றன.

இந்த மணிகளை ஆய்வு செய்ததில், இரும்பு, குரோமியம், நிக்கல், மாங்கனீசு, மாலிப்டினம், சிலிக்கான் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் சிக்கலான கலவை கொண்ட ஒரு உலோகத் துகள் கண்டறியப்பட்டது. வெடிப்பின் போது ஏற்பட்ட 7,000°C க்கும் அதிகமான வெப்பம் மற்றும் மிக வேகமான குளிர்ச்சியால் இந்தத் தனித்துவமான படிக அமைப்பு உருவானது.