லண்டனின் சோஹோ பகுதியில் உள்ள ஒரு இரவு நேர கிளப்பில் தாக்குதல் நடத்தியதாக சவூதி ப்ரோ லீக் வீரர் இவான் டோனி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

லண்டனின் மெட்ரோபாலிட்டன் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இங்கிலாந்து striker இவான் டோனி ஒரு நைட் கிளப்பில் தாக்குதல் நடத்தியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று வார்டோர் தெருவில் உள்ள ஒரு கிளப்பில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

30 வயதான இவான் டோனி மீது 'உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் தாக்குதல்' என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் வரும் செப்டம்பர் 24 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது சவூதி ப்ரோ லீக் கிளப் அல்-அஹ்லிக்காக விளையாடி வரும் டோனி, 2024 ஆம் ஆண்டில் பிரென்ட்ஃபோர்டிலிருந்து பெரும் தொகையுடன் இந்த கிளப்பிற்கு மாற்றப்பட்டார். அவர் 2026 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.