இந்தோனேசியாவின் மதுரா தீவிற்கு அருகில் ஜாவா கடலில் ஒரு பயணிகள் படகு தீப்பற்றி எரிந்தது. இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததோடு, பலரும் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மதுரா தீவிற்கு அருகில் ஜாவா கடலில் ஒரு பயணிகள் படகு தீப்பற்றி எரிந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பயணிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர், ஆனால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.