மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். ஆறு பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) அதிகாலை 3:54 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்த உயரமான குடியிருப்பில் இருந்து ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்ஹுவா செய்தி முகமையின் படி, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மீதமுள்ள இருவர் சிகிச்சையில் உள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.