பாரிஸில் ஒரு நபர் கத்தியால் மூன்று பெண்களைத் தாக்கியுள்ளார். தான் இறைவனின் கட்டளைப்படி இதைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
பாரிஸின் தெருவில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் மூன்று பெண்களைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மூன்று பெண்களும் காயமடைந்துள்ளனர்.
பணியில் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரி சந்தேக நபரைத் தடுத்து நிறுத்தினார். தாக்குதல் நடத்திய நபர், தான் அல்லாஹ்வின் கட்டளைப்படி இதைச் செய்ததாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. பிரெஞ்சு காவல்துறையினர் அவரைத் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.