பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) ராவலக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) ராவலக்கோட்டில் போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கியபோது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) தெரிவித்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராடி வந்தனர். வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இப்பகுதியில் இணையச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திலிருந்து இப்பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.