சிரியாவின் ஜராமனா நகரில் மினி பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.
தலைநகர் டமஸ்கஸிற்கு அருகிலுள்ள சிரியாவின் ஜராமனா நகரில் வியாழக்கிழமையன்று ஒரு மினி பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.